அன்பென்ற மழையிலே
*****
*கவிஞர் வைரமுத்து* வின் வரிகளில் , ஏ .ஆர். ரகுமான் இசையில், அனுராதா ஸ்ரீராம் குரலில்
*Song that perfectly matches with Christmas Festival.*
திரைப்படம் : மின்சார கனவு (1997)
*********
*அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே, அதிரூபன் தோன்றினானே!*
*வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் , வந்தவன் மின்னினானே!*
*வின்மீன்கள் கண் பார்க்க*
*சூரியன் தோன்றுமோ,*
*புகழ் மைந்தன் தோன்றினானே!*
*கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே,*
*சிசுபாலன் தோன்றினானே*!
*போர் கண்ட பூமியில் பூக்காடு காணவே,*
*புகழ் மைந்தன் தோன்றினானே*!
*கல்வாரி மலையிலே*
*கல்லொன்று பூக்கவே,*
*கருணை மகன் தோன்றினானே*! *
*நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்,*
*ஒளியாகத் தோன்றினானே*!
*இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே,*
*இறைபாலன் தோன்றினானே!*
*முக்காடு எங்கிலும்*
*பூக்காடு பூக்கவே,*
*புவிராஜன் தோன்றினானே*!
*****************
Comments
Post a Comment