நாம் எப்படிப் பேச வேண்டும், எப்படிப் பேசக் கூடாது
காலை நேர சிந்தனை ( 20.04.2024) நாம் எப்படிப் பேச வேண்டும், எப்படிப் பேசக் கூடாது என ஆத்திசூடி கற்றுத் தருவதை நமது நினைவூட்டலுக்காகத் தொகுத்து வழங்கப் பட்டுள்ளது. 1. ஔவியம் பேசேல்: ஒருவரிடமும் பொறாமைக் கொண்டு பேசாதே. 2. கண்டொன்று சொல்லேல்: பார்க்காததைத் பார்த்தது போலப் பேசாதே. (பொய்ச் சாட்சி சொல்லாதே). 3. ஞயம்பட உரை: கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாகப் பேசு. 4. வஞ்சகம் பேசேல்: உண்மைக்குப் புறம்பான கவர்ச்சிகரமான சொற்களைப் பேசி ஏமாற்றாதே. 5. கோதாட்டு ஒழி: கபட நாடகம் ஆடுவதை நிறுத்து. 6. சித்திரம் பேசேல்: பொய்யான வார்த்தைகளை உண்மை போலப் பேசாதே. 7. சுளிக்கச் சொல்லேல்: கேட்பவருக்குக் கோபமும் அருவெறுப்பும் உண்டாகும்படி பேசாதே. 8. சையெனத் திரியேல்: பெரியோர்கள் "ச்சீ" என வெறுக்கும் படி வீணாய் பேசித் திரியாதே. 9. சொற்சோர்வு படேல்: பிறருடன் பேசும் பொழுது நம்பிக்கை இழக்கச் செய்யும் வார்த்தைகளைப் பேசாதே. 10. தெய்வம் இகழேல்: இறைவனை இகழ்ந்து பேசாதே. 11. நொய்ய உரையேல்: அற்பமான வார்த்தைகளைப் பேசாதே. 12. பழிப்பன பகரேல்: பொய், கடுஞ்...