நல்வழி
நூல்: நல்வழி ஆசிரியர்: ஔவையார் பாடல்: புண்ணியம் ஆம்.... பாடல்: 2 புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள்- எண்ணுங்கால் ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும் தீதொழிய நன்மை செயல். பொருள்: மண்ணில் பிறந்தவர் வைத்திருக்கும் பொருள் எல்லாம் போன பிறவியில் செய்த புண்ணியம், பாவம் என்னும் இரண்டை.த் தவிர வேறு இல்லை என்று எல்லாச் சமயங்களும் சொல்கின்றன. எனவே தீமைகளை விலக்கித் தள்ளிவிட்டு நன்மை தரும் செயல்களைச் செய்வோம். அதனால் புண்ணியம் பெருகும். பாவம் போய்விடும். அடுத்த பிறவிக்கு முதலாக இருக்கும். நூல்: நல்வழி ஆசிரியர்: ஔவையார் பாடல்:26 பாடல்: ஆன முதலில் அதிகம் செலவானால் மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு விளக்கம்: ஒருவன் தன் வருமானத்தை விட அதிகம் செலவு செய்தால், அவன் கடன் வாங்கி தன் மானத்தை இழந்து, சொந்த புத்தியை இழந்து, போகும் திசை எல்லாம் அவனை எல்லாரும் திருடனைப் போல் பாவித்து அவனிடம் பேசுவதையே தவிர்ப்பர், ஏழு பிறப்புக்கும் தீயவனாய், நல்லவர்களுக்கும் ஆகாதவனாய் மாறிவிடுவான்....