Posts

Showing posts from March, 2022

தெய்வத்தின் பார்வையில்

தெய்வத்தின் பார்வையில்... எது நல்ல நேரம்? * நல்லதை நினைக்கும் போது..! * நல்லதை பார்க்கும் போது..! * நல்லதை கேட்கும் போது..! * நல்லதை பேசும் போது..! * நல்லதை செய்யும் போது..! வாழ்த்த பழகிக் கொண்டால் எல்லா நேரமும் "நல்ல நேரம்" எது இராகு காலம்? * அகங்காரம் கொள்ளும் போது..! * கோபம் உச்சத்தை தொடும் போது..! * பாசம் கண்களை மறைக்கும் போது..! * ஆசைகள் எல்லையை மீறும் போது..! * தேக கவர்ச்சியினால், கவர்ச்சியில் மூழ்கும் போது..!! எது குளிகை? * கவலைப்படும் நேரம்.. * பயப்படும் நேரம்... * கலங்கும் நேரம்... * முயலாத நேரம்... எது எமகண்டம்? * பொறாமைப்படும் போது... * புறம் கூறும் போது... * கோள்சொல்லும் போது... * சதி செய்யும் போது... எது பிரம்மமுகூர்த்தம்? * தாய் தந்தை மதித்து பேணி காக்கும் காலம்... * கடமையில் வழுவாத காலம்... * இறையுணர்வோடு அறவழியில் பொருள் சேர்க்கும் காலம்... எது சுபமுகூர்த்தம்? * சுயநலம் கருதாது பொதுநலம் கருதி பிறர்க்கு சேவை செய்யும் நேரம்... * சம்பாதிப்பதில் கொஞ்சத்தை ஒதுக்கி தானம், தர்மம் செய்யும் நேரம்...            வாழ்க வளமுடன்

நான்கு_No.4

*நான்கு_No.4* *4-பிரதான திசைகள் (Directions)* 1. கிழக்கு 2. மேற்கு 3. வடக்கு 4. தெற்கு *4-வேதங்கள் (Vedhas)* 1. ரிக் 2. யஜுர் 3. சாமம் 4. அதர்வணம் *4-சைவ.சமய.குரவர்* 1. திருஞானசம்பந்தர்,  2. திருநாவுக்கரசர்,  3. சுந்தரர்,  4. மாணிக்கவாசகர். *4-பிரதான ஆன்மீக பாதை* 1. கர்மா மார்க்கம் 2. பக்தி மார்க்கம் 3. யோகம்.... 4. ஞானம்.... *4-நான்குவிதமான ஒழுக்கங்கள்* 1. இந்திரிய ஒழுக்கம் 2. கரண ஒழுக்கம் 3. ஜீவ ஒழுக்கம் 4. ஆன்ம ஒழுக்கம் *4-மனிதனின் செயல்நிலைகள்* 1. விழிப்பு நிலை 2. சொப்பன நிலை 3. சுழுத்தி நிலை 4. துரியநிலை *4-அருட்ஜோதின் நிலைகள்* 1. சுயம் ;  2. பரம் ;  3. அருள் ;  4. சிவம் *4 - முக்தி நிலைகள் ;* 1. சாலோகம் 2. சாமீபம் 3. சாரூபம் 4. சாயுச்சியம் *4. பொருள்தன்மை நிலைகள்* 1.திடப்பொருள் 2.திரவப்பொருள் 3.வாயுபொருள் 4. அயனிமம் (plasma) *4. பருவகால நிலைகள்* இளவேனிற்காலம் ,  கோடைகாலம் ,  இலையுதிர்காலம் ,  குளிர்காலம் . *✍🏼....💐*