கணியன் பூங்குன்றனார்
*கணியன் பூங்குன்றனார்* சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை அடுத்த மகிபாலன்பட்டி சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் இது. *யாதும் ஊரே யாவரும் கேளிர்* இதன் முதல் வரி மட்டுமே பிரபலம். பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது. முழு பாடலும் அதன் பொருளும்👇. *"யாதும் ஊரே; யாவரும் கேளிர்,* *தீதும் நன்றும் பிறர்தர வாரா,* *நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன,* *சாதலும் புதுவது அன்றே,* *வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே,* *முனிவின் இன்னாது என்றலும் இலமே* *மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது* *கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று* *நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்* *முறைவழிப் படூஉம் என்பது* *திறவோர்காட்சியின் தெளிந்தனம்* *ஆதலின் மாட்சியின்* *பெயோரை வியத்தலும் இலமே,* *சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.* *பொருள்*👇 *"யாதும் ஊரே யாவரும் கேளிர்"* எல்லா ஊரும் எனது ஊர். எல்லா மக்களும் எனக்கு உறவினர் என்று நினைத்து, அன்பே வாழ்வின் அடிப்படை, ஆதாரம் என்று வாழ்ந்தால், இந்த வாழ்வு நமக்கு எவ்வளவ...